கவிதை: வாழ்க்கைச் சக்கரத்தில் கணிப்பொறி வல்லுநராய் நான் !

கவிதை: வாழ்க்கைச் சக்கரத்தில் கணிப்பொறி வல்லுநராய் நான் !

3 பதில்கள் so far »

  1. 1

    Kishore said,

    வாழ்கை சக்கரத்தில் கணிப்பொறி வல்லுநராய் நான்!!!

    துள்ளி திரிந்த பள்ளி பருவத்தில்
    தட்டாம் பூச்சி பிடித்து நண்பர்களுடன் விளையாடிய காலத்தில்
    நினைத்ததில்லை என்னுடைய இன்றைய வாழ்கையை!!!!
    ஆம் நினைத்ததில்லை, கணிப்பொறி வல்லுநராய் என்னை!!!

    உணவும் இருப்பிடமும் கனவாகி போனாலும்
    என் குடும்ப சூழ்நிலையால் நிஜமாகி போனது!

    குடும்பத்தை விட்டு சொந்தங்களை விட்டு பிறந்த ஊரை விட்டு
    ஆம் இன்று, கணிப்பொறி வல்லுநராய் நான்!!!!

    என் குடும்பம் அனைத்தையும் பெற்றது என்னை தவிர!
    நான் அனைத்தும் பெற்றேன் அவர்களை தவிர!!!

    சொந்தங்களை விட்டு பாசத்துக்காக ஏங்கும் எங்களுக்கான ஒரே ஆறுதல்
    உடன் இருக்கும் என் உடன்பிறவா சொந்தங்களே!!

    காபி டே, பிட்சா கார்னர்
    ஹை-டெக் வாழ்க்கை, பிளாட் சிஸ்டம்
    மாடர்ன் உலகத்தில் மனிதாபிமானம் மட்டும்
    மறைந்ததா? இல்லை தொலைந்ததா??

    சேது சமுத்திர திட்டம், அணு சக்தி ஒப்பதம்
    விண்ணை தொடும் விலைவாசி உயர்வு
    வடபழனி சைக்கோ, தொடர் குண்டு வெடிப்பு
    இப்படி நாட்டினர் கனவுகளில் பலபல!!

    ஆனால் என் கண்களிலும் கனவுகளிலும் கணிப்பொறி மட்டும் தான்!!
    என் கனவு, மகிழ்ச்சியையும் குழந்தைதனத்தையும் மின்-வலைகளில் தேடும் கனவு!!

    வாழ்க்கையில் எனக்கு பணம் தேவைப்பட்டது, ஆனால்
    இப்போதைய என் உடனடி தேவை என் வாழ்க்கை!!

    அம்மாவை காண கூட அலுவலகத்தில் அனுமதி
    பெற வேண்டிய வாழ்க்கை (நான் வாழ்ந்து கொண்டிருப்பது!!)!!!

    ஆம் நிஜத்தை தொலைத்துவிட்டு நிழலை தேடிக்கொண்டிருக்கும்
    எலி பொறியில் சிக்கிய
    கணிப்பொறி வல்லுநராய் நான்!!!!

  2. 2

    Hi Keelkattalai Kanipori Vallunare

    Nalla posting, varutha padaatheergal. Chinna vadhil thaane sambathikka mudium, aduvum Chennail thaane velai vaayppukkal ullathu.

    Ningal petrorai chennaikku azaithu varalaa me or appdiye bus pudichu madippakkam gramam, kovilambakkam, nanmangalam poittu vanga.

    Kamraj nagar poninganna vallioor, srivaikundam, theni, tanjore villagers niraya irukkanga. aaruthalaa irukkum.

    With best wishes

    Bharathiyaar_Rasiagn

  3. 3

    Suresh kumar said,

    Good.

    Why u changed the original one ?

    I thing that have more ” Uyer “.


Comment RSS · TrackBack URI

Bharathiyar_Rasigan -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி